கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நியமனமும் இலங்கை பெண்களும்

சம்பத் தேஷப்ரிய

இலங்கையில் முதலாவது மற்றும் ஒரே ஒரு பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்ஷானி ஜசிங்காராச்சியை நியமித்ததை எதிர்த்து முப்பத்திரண்டு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்கள் உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வு  தொடர்பான நியதிகளில் ‘பெண்கள்’ என்ற சொல் சேர்க்கப்படவில்லை என்று அவர்கள் வாதிட்டு வருகின்றனர். புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ள போதும், ‘பெண்கள்’ என்ற வார்த்தையை தீவிரமாக எடுத்துக் கொண்டு மூத்த அத்தியட்சகர்கள் எடுத்த இந்த நடவடிக்கையை ஒட்டுமொத்த சமூகமும் விமர்சிக்கிறது. எப்படியிருந்தாலும் வெவ்வேறு சமூகங்கள் இந்த விடயத்தில் அவர்களுக்குள்ள அறிவின் அளவைப் பொறுத்து விவாதங்களைத் தொடங்கியுள்ளன. இந்த உரையாடல்களில் ஆண்களும் பெண்களும் ஈடுபடுவது ஒரு முக்கியமான போக்காகும்.

முறைப்பாடு அளித்த குழுவில் உள்ள சிரேஷ்ட கண்காணிப்பாளர்களில் ஒருவர் வழக்கறிஞராவார். ஆகவே, நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்து இதுபோன்ற ஒரு விடயத்திற்காக அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகும்போது பிரச்சினை ஏற்படுகிறது. புதிதாக நியமிக்கப்பட்ட பெண் டி.ஐ.ஜி இன்று எதிர்கொண்ட சவாலை ஒரு தனிப்பட்ட பிரச்சினை என்று பெயரிட முடியாது. தற்போதைய சமுதாயத்தில் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையாக இதை பொதுமைப்படுத்தலாம். எனவே, இலங்கையில் உள்ள அரசியலமைப்பு நிறுவனங்களில் பெண்கள் வகிக்கும் நிலைப்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

பெண் சமத்துவம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றை அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்வது இலங்கை அரச நிர்வாகத்தின் முக்கிய கொள்கைகளாக இருக்க வேண்டும். 1978 இல் நிறுவப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 12.2 அறிக்கையில், பெண்களை சமமாக நடத்துவதற்கான கொள்கை தெளிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனங்களிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான பிரகடனம் CEDAW பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையும் அந்த பிரகடனத்தின் உறுப்பினராக உள்ளது. மேலதிகமாக, இலங்கை பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் இலங்கையில் பெண்களின் விடயங்களையும் அவர்கள் அரசாங்கத்தால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதையும் தொடர்ந்து அவதானிப்பதற்காக உயர்மட்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் மிக சமீபத்திய விசாரணைகள் மூலமாக, கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் உள்ள பெண்களுக்கு அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் ஈடுபடுவதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் 5 சதவீதம் வரை குறைந்தமை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறைந்தமை பற்றி கவனம் செலுத்தியுள்ளனர். அவர்களின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்குப் பிறகு, உள்ளூராட்சி சபைகளில் பெண்கள் பிரதிநிதித்துவம் சட்டத்தின் மூலமாக 25 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டது.

தீர்மானங்களை எடுப்பதில்  பெண்களின் பங்களிப்பைப் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு விழிப்புணர்வு திட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு 2017 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கு CEDAW ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, இத்தகைய விழிப்புணர்வு திட்டங்கள் பல்வேறு வகையான பாகுபாடுகளுக்கு வழிசமைக்கும் பெண்களைப் பற்றிய சலிப்பான விம்பத்தை அகற்றும். எனவே பெண்களின் உரிமைகள் அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. 1993 ஆம் ஆண்டில், பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றும் நோக்கத்துடன் இலங்கை மகளிர் சாசனம் நிறுவப்பட்டது. நாட்டில் இது போன்ற ஒரு சட்ட முறைமை நடைமுறையில் உள்ள நிலையில், ஒரு பெண்ணை டி.ஐ.ஜி ஆக நியமிப்பதை எதிர்த்து முப்பத்திரண்டு ஆண்கள் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதை இலங்கை பெண்கள் மட்டுமே எதிர்கொள்ளும் ஒரு தனிப்பட்ட விடயமாக அடையாளம் காண முடியாது. எந்தவொரு சமூகத்திலும் கலாச்சார, பொருளாதார மற்றும் மத எண்ணக்கருக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சூழ்நிலையாக இது அடையாளம் காணப்படலாம். எனவே இது உலகில் உள்ள முழு பெண்களுக்குமான ஒரு பிரச்சினையான சூழ்நிலையாக மாறியுள்ளது.

முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவையும், முன்னாள் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும், முன்னாள் பிரதம நீதியரசராக ஷிரானி பண்டாரநாயக்கவையும் நியமித்ததை வலியுறுத்துவதன் மூலம் ஒரு பெண்ணாக இருப்பது ஒரு பிரச்சினை அல்ல என்ற உண்மையை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் நியமனங்கள் சில குறிப்பிட்ட சமூக மற்றும் அரசியல் காரணங்களின் விளைவாக நடந்த நடவடிக்கைகள் என்று அடையாளம் காண முடியும். மறுபுறம், இந்த நியமனங்கள் தொடர்புடைய துறைகளில் ஆண் ஆதிக்கத்தின் விரிவாக்கம் என்று பெயரிடப்படலாம். கணவர்கள் படுகொலை செய்யப்பட்டதால் இந்த நியமனங்கள் நடந்தன என்பது அறியப்பட்ட ரகசியமாகும். சமுதாயத்தில் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவளுடைய பணிச்சுமை மற்றும் அவள் மகிழ வேண்டிய சுதந்திரத்தின் நிலை ஆகியவற்றுக்கு கடுமையான வரம்புகள் உள்ளன. சமூகத்தில் பெண்களின் நிலைப்பாடு வெவ்வேறு கவிஞர்கள், இலக்கிய கலைஞர்கள், பொருளாதார விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், உயர்வகுப்பினர் மற்றும் மதத் தலைவர்களால் அவர்களின் தனிப்பட்ட நிலை புரிதலுக்கேற்ப விவரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி ஒரு பெண்ணாக தனது பயணத்தின் போது வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார் என்பது தெளிவாகிறது. இப்போது கூட அவர் அத்தகைய சவால்களை எதிர்கொள்கிறார். நாட்டில் நிலவும் சட்டம் எதுவாக இருந்தாலும், அரச நிர்வாகக் கொள்கைகளை துரிதப்படுத்தும் விதத்திற்கு ஏற்ப இந்த நிலைமை மாறக்கூடும். அரசியலமைப்பில் எத்தகைய பெண்கள் உரிமைகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், டி.ஐ.ஜி பதவிக்கு ஒரு பெண்ணை நியமிக்க முடியாது என்று பொலிஸ் அறிக்கைகள் அமைதியாக சுட்டிக்காட்டியுள்ளன. பொலிஸ் அறிக்கைகளில் மட்டுமல்லாமல், சட்ட அமைப்பிலும் பல திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். சட்ட அமைப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் காலாவதியாகாத சில சட்டக் கருதுகோள்கள் தலைமுறையாக தொடர்வதைக் காணலாம்.

உரிமைகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான சட்டங்களை புதுப்பிக்கும்போது மத மற்றும் கலாச்சார தளங்களிலிருந்து அழுத்தம் காணப்படுமாயின், அது ஒரு நேரடி விவாதத்திற்கு வழிவகுக்க வேண்டும். தற்போதைய விவாதத்தின் தலைப்பாக இருக்கும் காதி நீதிமன்றங்களின் அமைப்பு முஸ்லிம் பெண்களை அடக்குவதாகக் கூறப்படுகிறது. பொலிஸ் அறிக்கைகளின் கூற்றுப்படி, அவர்களின் விதிமுறைகள் புதுப்பிக்கப்படவில்லை. பெரும்பான்மையான ஆண் அரசியல் தலைவர்கள் மற்றும் நவீன இலங்கை பெண்களின் கருத்துக்களுக்கிடையில் பெரிய வித்தியாசம் இருப்பதில்லை. சமுதாயத்தில் உள்ள மத, கலாச்சார, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படும் வரம்புகளுக்கு பெண்கள் மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். இந்த முறைமைக்கு விதிவிலக்குகள் இருந்தாலும், அது திருப்திகரமான நிலைமையை எட்டவில்லை. எனவே, குடிமக்களின் மனநிலையை பரந்த அளவில் மாற்ற வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts