கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட் பெருந்தொற்றின் கீழ் வர்த்தக வலய பணியாளரின் உரிமைகள்

கோவிட்-19 பெருந்தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்போது, இலங்கையின் சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்தே, அவர்கள் வேலை, ஊதியம், உணவு மற்றும் பிற அடிப்படை தேவைகள் போன்றவற்றில் இழப்புக்களை எதிர்கொண்டனர். அவர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் ஆடைகளை வாங்கிய பெரிய பிராண்ட் நிறுவனங்கள் இதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு பதிலாக, பல தொழிலதிபர்கள் வேலையிலிருந்து நிறுத்துதல், ஊதிய நிறுத்தம் மற்றும் மேலதிக கொடுப்பனவு நிறுத்தம் மூலம் தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட இலாப இழப்பை ஈடுசெய்ய முயன்றனர்.

திறந்த பொருளாதாரத்தை ஸ்தாபிப்பின் மூலம் 1977 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆடைத் தொழிற்துறை, இன்று உலகளவில் புகழ்பெற்ற பிராண்டுகளுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஆடைத் துறை இலங்கைக்கு மிகப் பெரிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் துறையாக இருந்ததுடன், ஆண்டு வருமானம் சுமார் ரூ. 5 பில்லியன்களாகும். தற்போது நாட்டில் சுமார் 300-350 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதுடன் அவை சுமார் 300,000 நேரடி வேலை வாய்ப்புகளையும் 600,000 மறைமுக வேலை வாய்ப்புகளையும் வழங்குகின்றன என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஜனவரி 2020 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் சேர்ந்தவர்களில் பெரும்பாலனோர் பெண்களாவர். நாட்டின் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த பின்னர், வடக்கு மற்றும் கிழக்கில் 10 ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தத் துறையின் வருமானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், ஒரு பேரழிவை எதிர்கொண்டாலும் கூட, பல மாதங்களாக தங்கள் உழைப்பை வழங்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்கான எந்தவொரு திட்டமும் இன்னும் இல்லை என்பது ஒரு பரிதாபமாகும். கோவிட்டைப் போல பேரழிவு இல்லை என்றாலும், சுதந்திர வர்த்தக வலயங்களில் வாழும் ஆடைத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் சமமாக இல்லை. அத்தகைய சூழலில், ஒரு தொற்றுநோய் தொடங்குவது அவர்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய அடியாகும்.

கோவிட் 19 தொற்றுநோய் அதிகரித்துள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களின் உரிமைகளை கடுமையாக மீறியதாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன. சுதந்திர வர்த்தக வலய பணியாளர் உரிமைகளுக்காக பணிபுரியும் ஒரு அமைப்பான RED (மனித அபிவிருத்திக்கான புரட்சிமான அமைப்பு) கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு ஆய்வில், சுதந்திர வர்த்தக வலயங்களில் மொத்த பணியாளர்களின் (11,000) வேலை இழப்பு சுதந்திர வர்த்தக வலய பணியாளர்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் மீதான கோவிட்-19 இன் தாக்கத்திற்கு தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. முதலீட்டு சபை, தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வர்த்தக வலயங்களில் ஏற்கனவே 3366 தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதுடன், அவர்களில் 1236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த புள்ளிவிவரங்கள் இப்போது இன்னும் அதிகமாக உள்ளன. 8000 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகவும், சுமார் 4000 ஊழியர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிராந்தியங்களில் உள்ள பணியாளர்களை கையாளும் நிறுவனங்கள், தொழில் ஆணையாளர் நாயகம் மற்றும் முதலீட்டுச் சபை அதிகாரிகள் கடந்த நவம்பரில் தொழிலாளர் திணைக்களத்தில் கலந்துரையாடி ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் மனிதவள அடிப்படையில் தொடர்ச்சியாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ. 5,000 ஊக்குவிப்பாக வழங்குவதற்கு தீர்மானித்தனர். தபிந்து கூட்டாண்மை, Stand Up Moment இலங்கை, மனித மேம்பாட்டுக்கான புரட்சிகரமான அமைப்பு (RED), மற்றும் ஷரமபிமானி மையம் போன்ற அமைப்புகள் தங்கள் கோரிக்கைகள் இருந்தபோதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகின்றன.

ஏற்கனவே, சுதந்திர வர்த்தக வலயங்களில் ஏராளமான ஆடைத் தொழிலாளர்கள் வேலை இழப்பு, ஊதியம் வழங்காமை, வருடாந்த போனஸ் பெறாமை, வீட்டிற்குச் செல்ல PCR சோதனைகளின் செலவைச் ஏற்க வேண்டியமை மற்றும் விடுதிகளில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு முகங்கொடுத்தல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சுதந்திர வர்த்தக வலயங்களில் குடியேறி பணியாற்றிய வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வந்த பணியாளர்களும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில், அதிகப்படியான பணியாளர்கள், மேலதிக நேர ஊதியம் வழங்காதது, விடுப்பு ரத்து செய்யப்படுதல் மற்றும் இந்த நிபந்தனைகளுக்கு இணங்காத ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் போன்றன பற்றியும் முறைப்பாடுகள் வந்துள்ளன. பணியாளர்கள் உரிமைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக துணை நிற்க வேண்டிய உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் மீறப்படும் சுகந்திர வர்த்தக வலயங்களின் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts