கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

நல்லிணக்கம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ

இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை உருவாக்குதல் எந்த திகதியும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அரசியலமைப்பை உருவாக்குவதற்கு பொதுமக்களிடம் கலந்தாலோசிப்பதற்காக 2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கம் லால் விஜேநாயக்கவின் தலைமையிலான குழுவை நியமித்தது. தற்போதைய அரசாங்கம் பி.சி. ரொமேஷ் டி சில்வா தலைமையிலான வரைவுக் குழுவை மேலும் நியமித்திருக்கின்றது. அந்தக் குழுவிற்கு வழங்கப்பட்ட காலம் முன்னேற்றம் இல்லாது முடிவடைந்தது. 1978 அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டதிலிருந்து, அரசியல் கட்சிகளும் மக்களும் அதனைத் திருத்துமாறு கோருகிறார்கள், ஆனால் கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் அதனைப் பயன்படுத்தி அதிகாரத்தில் இருக்கிறார்கள். தலைவர்கள் 1978 அரசியலமைப்பை எதிர்க்கட்சியில் இருக்கும் போது கடுமையாக எதிர்க்கின்றனர். இருப்பினும், அவர்கள் அதிகாரத்திற்கு வந்ததும் 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் பாதுகாக்கும் கடவுளாக மாயமாக மாற்றுகின்றார்கள்.

சமீபத்திய ஆறு ஆண்டுகளில், ஒரு புதிய அரசியலமைப்பிற்கான நம்பிக்கைகள் இரண்டு முறை சிதைந்தன, இருப்பினும் நான்கு தசாப்த கால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சரியாக வழிநடத்துவதற்கு சரியாக வடிவமைக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு அவசியமாகும். எந்தவொரு எதிர்கால அரசாங்கத்திற்கும் நிலையான அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியமாகும்.

அமைதியான குடிமக்கள் அத்தகைய அரசியலமைப்பு வரைவு செயன்முறைக்கு முன்கூட்டியே ஒரு நிபந்தனையை முன்வைக்க வேண்டும். இது அனைத்து குடிமக்களையும் சமமாக நடாத்துதல்  மற்றும் அனைத்து சமூகங்களின் மொழி, கலாச்சார மற்றும் மத அடையாளங்களை பாதுகாத்தலாகும்.

1948ல் சுதந்திரமடைந்ததிலிருந்து 1972 வரை இலங்கை சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஆட்சி செய்யப்பட்டது. அந்த அரசியலமைப்பு மேற்கூறிய இரட்டை கருத்துக்களுக்கு உத்தரவாதம் அளித்தது. இருப்பினும், 1970 ல் ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 இல்  குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றியது, அதில் பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பிரிவு காணப்பட்டது. இருப்பினும், அரசியலமைப்பில் அனைத்து சமூகங்களையும் சமமான நடாத்துவதற்கான ஏற்பாடுகளும் காணப்பட்டன. இன்றுவரை இலங்கையின் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்கள் என்பதால், அவர்களுக்கு ஒவ்வொரு செயற்பாட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவே, அரசியலமைப்பால் வெளிப்படையாக உத்தரவாதம் அளிக்கப்படுவது தேவையற்றது. ஆரம்பத்தில், ஒரு மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மற்றும் அதனடிப்படையில் அரசாங்கத்தின் பொறுப்பு என்பன மற்ற சமூகங்களுக்கு எதிரான பாகுபாட்டைக் குறிக்கிறது. சமத்துவத்தை பாதுகாக்கும் பிரதானமான சட்டமே சமத்துவத்திற்கான உரிமையை மீறுவதாக ஒருவர் வாதிடலாம்.

குடியரசு அரசியலமைப்பு தயாரிக்கப்பட்ட காலத்தின் சமூக மற்றும் அரசியல் போக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, ​​பௌத்த மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மக்களிடமிருந்து எந்த கோரிக்கையும் எழவில்லை. இது சிங்களத்தை ஒரே அரச மொழியாக அறிவிக்கும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் கவர்ச்சி வாசகத்தின் வெறும் விரிவாக்கமாகும். இல்லையெனில், ஒரு மூத்த மார்க்சிஸ்ட் தயாரித்த அரசியலமைப்பில் ஒரு மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான ஒரு பிரிவை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை. 1978 அரசியலமைப்பிலும், ஐ.தே.க. தலைவரான ஜே. ஆர்.ஜெயவர்த்தனாவும் முன்னைய அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட பிழையை சரிசெய்யவில்லை. இந்த உதாரணங்கள் முக்கியமான அரசியல் முடிவுகளில் பௌத்த மதத் தலைவர்களின் சக்திமிக்க செல்வாக்கினை குறிக்கின்றன. இன்றும் கூட, ஒரு அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையின் அடிப்படையில் எழுப்பப்படும் ஒரு முக்கிய கேள்வி பௌத்தத்திற்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமாகும். இருப்பினும், குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிரான இத்தகைய பாகுபாடு இன நல்லிணக்கத்தை கடுமையாக பாதிக்கலாம்.

இந்நிலைமை முழு அரசியலமைப்பையும் ஒரு சரத்தின் மூலம் சவாலுக்குட்படுத்துவதற்குச் சமமாகும். குடிமக்கள் இதை ஒரு பரந்த பார்வையில் தர்க்கரீதியாக கருத்திலெடுக்க வேண்டும். அவர்கள் இலங்கைத்தீவின் மனநிலையிலிருந்து தங்களை விடுவித்து, மனித உரிமைகள் சிறப்பாக நிறுவப்பட்ட அரசாங்கங்களின் உதாரணங்களைப் பார்க்க வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து அரசாங்கங்களிலும் மதச்சார்பற்ற அரசாங்கங்கள் உள்ளன. எனவே, அனைத்து மதங்களுக்குமான சமத்துவம் இயல்பாகவே உத்தரவாதமளிக்கப்படுகிறது.

நமது அண்டைநாடான இந்தியா ஒரு பாரிய இன மற்றும் மத பல்வகைமையைக் கொண்ட அரசாகும். பெரும்பான்மையாக இந்துக்களை குடித்தொகையில் 80% கொண்டுள்ளதுடன், முஸ்லிம்கள் 13.2%. கத்தோலிக்கர்கள், சீக்கியர் மற்றும் பௌத்த சமூகங்கள் முறையே 2.3%, 1.72% மற்றும் 0.7% ஆகும். மேலதிகமாக, நூற்றுக்கணக்கான பிற சிறுபான்மை மதங்களும் உள்ளன. இந்துக்கள் குடித்தொகையில் 80% என்றாலும், இந்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சரத்து அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாக இருப்பதன் மூலம் முழு பிராந்தியத்திற்கும் ஓர் முன்மாதிரியை வழங்குகிறது. எந்தவொரு மதத்திற்கும் எதிராக அரசியலமைப்பில் பாகுபாடு காட்டாத கொள்கையின் காரணமாக நாட்டில் மத நல்லிணக்கம் உறுதி செய்யப்படுகிறது. இந்த அரசியலமைப்பு உத்தரவாதத்தின் காரணமாக அனைத்து சிறுபான்மை சமூகங்களும் எந்தவொரு நெருக்கடி சூழ்நிலையிலும் அரசாங்கத்தை நம்பமுடியும்.

இந்தியா மொழி வாரியாகவும்  உதாரணத்தை வழங்குகிறது. பெரும்பான்மையினர் பேசும் ஹிந்தி மொழியும் அசாம், பெங்காலி, குஜராத், தெலுங்கு, தமிழ் மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 14 மொழிகளும் பிரதான மொழிகளாக கருதப்படுகின்றன. மணிப்பூரி, நேபாளி, சிந்தி போன்ற பல மொழிகள் துணைப் பிரதான மொழிகளாகக் கருதப்படுகின்றன. அனைத்து மாநிலங்களுக்கும் தங்கள் மொழிகளை தீர்மானிக்க சுதந்திரம் உள்ளதுடன் மொழி அடிப்படையிலான மோதல்கள் இந்தியாவில் மிகக் குறைவாகும். 

இந்தியாவின் அரசியலமைப்பை இங்கு பிரதியெடுக்கப்பட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், இலங்கையின் அரசியலமைப்பை திருத்தும் போது இந்திய அரசியலமைப்பின் ஆரோக்கியமான பண்புகளை நாம் கருத்தில் கொள்ளலாம். இலங்கையின் தற்போதைய சூழலில், இன முரண்பாடு அரசியல்வாதிகளுக்கு இன நல்லிணக்கத்தை விட லாபகரமானது. போர் முடிந்த பின்னர் நிலைமை மோசமடைந்தது. சிறுபான்மை சமூகங்களின் ஆதரவுடன் அதிகாரத்தைப் பெறுவதற்குப் பதிலாக, இலங்கை அரசியலில் தனிச் சிங்கள இன சக்தி கொண்ட அரசாங்கங்களை உருவாக்குவதாக மாற்றப்பட்டது. இந்தப் பின்னணியில், இலங்கையின் நல்லிணக்கத்தை விரும்பும் சமூகம் நல்லிணக்கத்தை அடைவதனை இலக்காகக் கொண்டு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

සහජීවනය සහ ව්‍යවස්ථාව සංශෝදනය

Reconciliation And Constitutional Reform

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts