Transparency

துறைமுக இறங்குதுறை குறித்த பொருளாதார விவாதம் மாயைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் ஊசலாடுகிறது

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட அரசாங்கம் தயாராக இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்கு பங்களித்த அரசாங்கத்திற்குள் உள்ள அரசியல் குழுக்களின் செல்வாக்கின் காரணமாகவும் தேசியவாத சக்திகளின் காரணமாகவும் அது அடக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தில் நாற்பத்தொன்பது சதவீதமாகவும், இலங்கை அரசாங்கத்தின் கைகளில் ஐம்பத்தொன்று சதவீதமாகவும் உள்ளவாறாக இந்த ஒப்பந்தம் பிரிக்கப்பட்டிருந்தது. மகா சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை எதிர்கொண்டு அரசாங்கம் தனது முயற்சிகளை கைவிட்டது.

இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து  நல்லாட்சி அரசாங்கத்தால் இவ் உடன்படிக்கை இராஜதந்திர ஒப்பந்தமாக மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு பதிலாக இந்தியாவின் அழுத்தம் காரணமாக தற்போதைய அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக ஒப்பந்தத்திலிருந்து விலகியதுடன் தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் எட்டிய ஒப்பந்தத்தை செயற்படுத்த முயற்சித்தாலும், அதை மேற்கொள்ள முடியவில்லை. இடத்தை குத்தகைக்கு எடுக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்த குழுக்கள் அவ் எதிர்ப்பை  அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொண்டிருக்கலாம். அந்தஸ்தை  நிலைநிறுத்துவது தங்களது பொறுப்பு என்றும் அது அவர்களின் அரசியல் எதிர்காலத்திற்கான ஒரு நல்ல முதலீடு என்றும் அவர்கள் அறிந்திருப்பதால் அவர்கள் ஆட்சேபனைகளை எழுப்பியிருக்கலாம்.

இந்த கட்டுரையின் முக்கிய நோக்கம் கிழக்கு இறங்குதுறையை குத்தகைக்கு விடுவது சரியானதா இல்லையா, அதானி நிறுவனம் சரியானதா அல்லது தவறானதா, மற்றும் தொழிற்சங்கங்கள் சரியானதா அல்லது தவறானதா என்பதை ஆராய்வது அல்ல. இந்த புராண சித்தாந்தங்களுடன் வீட்டில் உணவருந்த முடியாது.

இந்த தேசபக்தி குழுக்கள் என்ன கூறினாலும், கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாடு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்கியுள்ளது. அதன் நிபந்தனைகளில் ஒன்று, துறைமுகத்தின் மூன்று முனையங்களும் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாகும். இருப்பினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனியார் துறையுடன் இணைந்து இரண்டு முனையங்களை உருவாக்க முடிவு செய்தார். பின்னர் துறைமுக அபிவிருத்திக்காக சீன வணிக நிறுவனத்தை தொடர்பு கொண்டார். தெற்காசிய நுழைவாயில் முனையமும் 1999 இல் குத்தகைக்கு விடப்பட்டதுடன் அந்த ஒப்பந்தம் 2029 இல் காலாவதியாகிறது.

நவீன இடதுசாரிக் குழுக்களின் மனநிலையை இந்த நாட்டில் நிலைத்திருக்கும் இடதுசாரிகளின் சுரண்டல் தொடர்பான எண்ணக்கருவின் விரிவாக்கமாகக் காணலாம். வெளிநாட்டு முதலீடு மற்றும் சந்தை வரையறைகள் குறித்த அவர்களின் அணுகுமுறை மேற்கூறிய வரையறுக்கப்பட்ட அறிவு முறையை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் சுரண்டல் மற்றும் வர்த்தகத்தை ஒன்றாகக் கருதுவதற்கு பழக்கமாகி இருப்பதால் குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பதையும் சுரண்டல் என வரையறுக்கிறார்கள். கடந்த காலத்தில், இந்த விடயத்தை விளக்குவதற்கு கார்ல் மார்க்ஸ் கூட போராட வேண்டியிருந்தது. உண்மையான விலையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம், வாங்குபவர்கள் விற்பனையாளராவதுடன் மற்றும் விற்பனையாளர்கள் வாங்குபவர்களாகின்றனர் என்றும், முதலாளித்துவ சந்தையில், இலாபங்கள் மற்றும் நஷ்டங்கள் இறுதியில் சமநிலையில் உள்ளன என்றும் மார்க்ஸ் கூறினார். மார்க்சின் பிரகாரம், இலங்கையின் இடதுசாரி தேசபக்தி சக்திக்கான அடிப்படை உணரப்படவில்லை என்பதே உண்மை, மற்றும் ஒரு நாட்டின் முதலீட்டு அபிவிருத்தியைப் போல அது விருத்தி செய்யப்படவில்லை என்பதே பிரச்சினையாகும். இந்த நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் சமூக யதார்த்தம் அதுதான். நாட்டில் பல இடதுசாரி குழுக்கள் வர்த்தக அறிவியலைப் புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றன. எனவே அவர்கள் மேற்பரப்பில் தோன்றுவதை மட்டுமே யதார்த்தமாக கருதுகின்றனர். தற்போது சமூகமயமாக்கிக் கொண்டிருக்கும் இந்த அணுகுமுறைகளை உடைப்பது கடினமாகும்.

அத்தகைய மக்களின் கருத்தியல் வறுமைக்கு பதிலளிப்பதற்கு மார்க்ஸின் புத்தகத்தின் இந்த பகுதி சிறந்த உதாரணம் என்று குறிப்பிடலாம். “மூலதன தயாரிப்புகளின் முக்கிய நோக்கம் மிகை அளவின் உற்பத்தியாகும் என்பதால், ஒரு நபரின் அல்லது ஒரு நாட்டின் செல்வத்தின் அளவு அளவிடப்படுவது உற்பத்தி செய்யப்படும் முழுமையான அளவினால் அல்லாது மிகை உற்பத்தியின் ஒப்பீட்டு அளவைக் கொண்டாகும்.” எனவே, இந்த மிகை பெறுமானங்கள் ஒரு நாட்டின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் என்பது தெளிவாகிறது. இன்று நாம் எதிர்கொள்ளும் எளிய உண்மை என்னவென்றால், அபிவிருத்தியடைந்த நாடுகளிலிருந்து மூலதனம் அபிவிருத்தியடையாத நாடுகளுக்கு பாய்கிறது. எங்களைப் போன்ற நாடுகளிலிருந்தும் கூட பிற நாடுகளுக்கு மூலதனம் பாய்கிறது. இலங்கைக்கு அந்நிய முதலீடு வருகிறதுடன், இலங்கை நிறுவனங்களும் பிற நாடுகளில் முதலீடு செய்கின்றன. மூலதனம் இப்படித்தான் நகர்கிறது.

நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த மிகை உற்பத்தி பெறுமதி, உற்பத்தி வினைத்திறனை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அடைய முடியும். முன்னேற்றகரமான தொழில்நுட்பம், குறைந்த உள்ளீடு மற்றும் குறைந்த உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு அவ்வாறு செய்வது அவசியமாகும். இந்த சமூக அமைப்பின் கீழ், முதலாளித்துவ அமைப்பு அதன் சொந்த அமைப்பைப் பெறுவதற்கு மிகை உற்பத்தியின் ஒரு பகுதியைப் பயன்படுத்துகிறது. சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, தகவல் தொடர்பு, சாலைகள், இராணுவம், காவல்துறை, அரசு நிறுவனங்கள், மதக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைத்தும் மேற்கூறியவற்றால் பராமரிக்கப்படுகின்றன. எனவே, இந்த இரண்டு காரணிகளான பொருளாதார மாயை மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகியவை ஒன்றிணைந்த ஒரு புள்ளியை நாம் காணவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts