எமது நிர்மாணிப்புக்களை அச்சொட்டாக பதிவு செய்து என்டனா உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னிடம் பலர் குறிப்பிடுவார்கள். என்னால் அநேகமானோர் வாழ்வதாக நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என இலங்கை மக்கள் பெயர் குறிப்பிட்டவுடன் அடையாளப்படுத்தும் படபொல என்டனா உற்பத்தியாளர் அவ்வாறு குறிப்பிட்டார். அவர் பத்மலால் மலவிகே. காலி படபொல பகுதியில் பாரியளவில் தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ள கலை ஆசிரியர்.

ரூபவாஹினி என்டனா பற்றி பேசுகையில் படபொல நகரம் நாடு முழுவதும் பிரபல்யமடைந்துள்ளது. இந்த கதை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் பழமையானது. படபொல மஹாவத்த வீட்டில் சந்தித்த போது பத்மானந்த வலவ்கே ரூபவாஹினி என்டனாவின் வரலாறு பற்றி பேசிக்கொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.
நான் இயல்பாகவே கலை நயமிக்கவனாக இருந்தேன்.1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது சுவரொட்டிகளை என்னால் நன்றாக வரைய முடியும். ஒருசில சுவரொட்சிகளை நான் வரைந்திருப்பேன் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டேன். வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் ஒருவருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தேன்.
தடுப்பு காவலில் இருந்த போது பலவிதமான டிசைன்களை உருவாக்குவதை (வடிவங்கள்) கற்றுக்கொண்டேன்.தடுப்புக்காவலில் இருந்த போது கிடைக்கும் உணவு போதுமானதல்ல. அதிகளவில் உணவு உண்பதற்கு சிந்தித்தேன். அதிகளவில் உணவு கேட்டாலும் வழங்கமாட்டார்கள். நான் உணவு தட்டை ஒரு குவளை போல் செய்தேன். அதில் அதிகளவில் உணவு கிடைக்கும். அந்த கிண்ணம் போன்ற தட்டில் உணவு கிடைப்பதால் எனது வயிறு நிரம்பியது. அதுவே எனது முதலாவது நிர்மாணிப்பு.
சிறையில் இருந்து விடுதலையானதன் பின்னர் ஹெவுட் நிறுவனத்தில் இணைந்து கலை தொடர்பான கற்கை நெறியை தொடர்ந்தேன். 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆசிரியராக சேவையாற்றினேன். அந்த காலப்பகுதியில் ரூபவாஹினி இருக்கவில்லை. வானொலி மாத்திரமே இருந்தது. வானொலிகளுக்கும் அப்போது என்டனாவை இணைக்க வேண்டும். எனது சகோதரர் கைத்தொழில் பணிகளில் திறமையானவர்.
அநேகமானோர் என்டனா இணைப்புகளுக்காக எங்களை தேடி வருவார்கள்.ஆகவே என்டனா தொடர்பில் அறிவு எனக்கு இருந்தது. ரூபவாஹினியின் வருகைக்கு பின்னர் என்டனா இணைப்பு கட்டாயமானது. ஆரம்ப காலப்பகுதியில் தொலைக்காட்சிக்கு இரண்டு என்டனாக்களை பொறுத்துவது கட்டாயமானது. அதில் ஒன்று ஆறு அல்லது எட்டு அடி நீளமுடையது. என்டனாக்களை இணைக்க செல்லும் போது பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தோம். இதனால் தான் இலகுவான என்டனாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோற்றம் பெற்றது.
அந்த காலப்பகுதியில் நான் காலி அம்பேகம மகா வித்தியாலயத்தில் கற்பித்தேன். அந்த பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியரான நிஹால் முனசிங்கவிடமிருந்து என்டனா உருவாக்கும் ஆலோசனைகள் எனக்கு கிடைக்கப் பெற்றன. அவரது ஆலோசனையுடன் இலகுவான வகையில் இரண்டு கூறுகளை கொண்ட என்டனாவை உருவாக்கினேன். அதனூடாக படபொல பகுதியில் தெளிவான வகையில் அலைவரிசைகள் கிடைக்கப் பெற்றன. ஏனைய பகுதியில் இந்த என்டனா ஊடாக அலைவரிசைகள் கிடைக்கப்பெறுமா என்பதை ஆராயும் வழிமுறை இருக்கவில்லை. ஆகவே அதற்காக நான் பாடசாலை மாணவர்களுடன் கல்வி சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்தேன். அதற்காக கல்வி காரியாலயத்தில் விசேட அனுமதியை பெற்றுக் கொண்டேன்.
மூன்று நாட்கள் கல்விச் சுற்றுலாச் சென்றோம். பயணம் செல்லும் போது உயர்ந்த பகுதிகளுக்குச் சென்று என்டனாவை பொறுத்தி சோதித்துப் பார்த்து குறைகளை திருத்திக் கொண்டோம்.யாழ்ப்பாணத்தை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளுக்கும் சென்று என்டனாவை பரிசோதனை செய்து பார்த்தேன். முழு நாட்டுக்கும் பயன்படுத்த கூடிய வகையில் எனது படைப்பினை உருவாக்குவதற்கு இந்த வகையில் தான் கஸ்டப்பட்டேன். இருப்பினும் தற்போது பெருமளவிலானோர் எனது படைப்பின் ஸ்டிக்கர்களை பதிவு செய்து பல்வேறு பெயர்களில் என்டனாக்களை உற்பத்தி செய்கிறார்கள். நான் என்டனாவை தயாரிக்கும் போது வீட்டாரின் உதவிகள் கூட கிடைக்கவில்லை. தந்தை பைத்தியகார வேளை செய்கின்றீர்கள் என்று குறிப்பிட்டு என் பிள்ளைகள் கூட உதவி செய்யவில்லை. என்டனாவை பரிசோதிப்பதற்கு மரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாக இருப்பேன்.
எனது என்டனா பிரபல்யமடைந்தவுடன் பலர் எனது என்டனாவை திருட ஆரம்பித்தார்கள். உயரமாக என்டனாவை பொருத்த வேண்டிய தேவை இல்லாத காரணத்தால் இலகுவில் திருடிவிடுவார்கள். ஒரு வீட்டு உரிமையாளர் திருடனை பிடித்து பொலிஸில் ஒப்படைத்து வழக்குத் தாக்கல் செய்தார். சாட்சியாளராக நானும் நீதிமன்றம் செல்ல நேரிட்டது. இதனூடாக நானும் பிரபல்யமடைந்தேன். இதன் பின்னர் நீதிபதியும் என்னிடம் என்டனாவை கொள்வனவு செய்தார். அதன் பின்னர் எனது என்டனாக்களை எவரும் திருடவில்லை.
தற்போது நான் ஓய்வுப்பெற்றுள்ளேன்.எனக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களுக்கும் என்டனாவை நிர்மாணிக்க முடியும். மூத்த மகள் பட்டதாரி இருப்பினும் தொழில் இல்லை. தற்போது அவர் எனது என்டனாவை விற்பனை செய்யும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்.எனது நிர்மாணிப்புக்கு அனுமதி பத்திரம் பெறுவதற்கு சென்ற போது படபொல நகரம் என்ற பெயரி;ல் அனுமதி பத்திரம் வழங்க முடியாது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டது. இறுதியில் எனது என்டனாவின் வடிவமைப்புக்கு மாத்திரம் அனுமதி பத்திரம் கிடைத்தது. அதனால் வடிவமைப்பை மாற்றி ஏனையவர்கள் அந்த ஸ்டிக்கரை பதிவு செய்து என்டனாக்களை நிர்மாணிக்கிறார்கள். எனது என்டனா பிளக்சி என்ற பெயரில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்டிக்கர்களை பதிவு செய்து யார் எத்தனை என்டனாக்களை உற்பத்தி செய்தாலும் பிளக்சி என்டனாக்களுக்கு இன்றும் கேள்வி அதிகளவில் உள்ளன.மாதத்துக்கு 100 வரையான என்டனாக்களை உற்பத்தி செய்கிறேன். படபொல என்டனாவின் நிர்மாணிப்பாளர் புன்முறுவலுடன் அவ்வாறு குறிப்பிட்டார்.